News February 26, 2025
டிஜிட்டல் கைது: துணை வேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி

ஒடிஷாவில் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 லட்சத்தை பெர்காம்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாஞ்சலி இழந்துள்ளார். தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் கைது மோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Similar News
News March 31, 2026
நாளை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

☛இனி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் ஏதேனும் 2 அம்சங்கள் தேவைப்படும்: PIN/PASSWORD, Registered Device, Finger Print, Face ID. ☛நாடு முழுவதும் E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ☛KYC இல்லாத FASTag கணக்குகள் முடக்கப்படும். ☛சில வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. ☛புதிய காப்பீட்டு பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும்.
News March 31, 2026
2 நாள்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வரும்: பியூஷ் கோயல்

தமிழகத்தில் மாநில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாள்களில் பட்டியல் வெளியாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
News March 31, 2026
BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


