News February 26, 2025
ரெய்டு அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்: அம்மன் அர்ஜூனன்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கூறியுள்ளார். 13 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக, வரும் தேர்தலிலும் தோல்வி அடையும் என்றார்.
Similar News
News February 26, 2025
அறியாமையில் பேசும் விஜய்: திமுக பதிலடி

இந்தி மொழித் திணிப்பில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து நாடகமாடுவதாக விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். மொழி பற்றி திமுக நாடகமாடுவதாக அறியாமையில் விஜய் பேசுகிறார் என விமர்சித்த அவர், இந்தி மொழிக்கு எதிராக 1938 முதல் போராட்டம் நடந்து வருகிறது. மொழிக்காக பலர் தீக்குளித்து உயிரைக் கொடுத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
News February 26, 2025
சிவராத்திரியில் சிவலிங்கத்தை வழிபட்ட Ban. கிரிக்கெட் வீரர்

மகா சிவராத்திரியில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்த அவர், ‘ஹரா ஹரா மகாதேவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை, நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
News February 26, 2025
அரசுப் பள்ளியிலேயே மாணவன் மரணம்

நாமக்கலில் அரசுப் பள்ளிக் கழிவறையில் 9ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் இறப்புக்கு முறையான காரணம் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், தேனியில் கல்லூரி மாணவர் மரணத்திற்கு எறும்பு கடித்தது தான் காரணம் என கூறிய போலீஸ், இந்த மாணவன் இறப்பிற்கு என்ன சொல்லப் போகிறது என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.