News February 26, 2025
பாகிஸ்தானை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர்: ரமீஸ் ராஜா

CT தொடரில் இருந்து PAK அணி திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக பாக்., முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும் எனவும், நியூசிலாந்துடன் மோதும் வகையில் ஐசிசி அட்டவணை தயாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசி மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த PAK அணி CT தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Similar News
News February 26, 2025
25 ஆண்டுகள் கழித்து.. அஜித்துடன் நடிக்கும் ஷாலினி?

25 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஷாலினி நடிக்க இருப்பதாக செய்தி வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி டீசர் அறிவிப்பு வீடியோவில், ஒரு பங்களா காட்டப்பட்டது. அதே பங்களா முன்பு போட்டோ எடுத்து அதை ஷாலினி வெளியிட்டுள்ளார். ‘இவுங்க எதுக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போணும்… ஒருவேள இருக்குமோ’ என ரசிகர்கள் கேட்க தொடங்கி விட்டனர். ஷாலினி 2001ல் பிரியாத வரம் வேண்டும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
News February 26, 2025
கல்யாணம் பண்ணலனா வேலை இல்லையாம்..

வரும் செப்டம்பருக்குள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சீனாவில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், இந்த உத்தரவை பிறப்பித்தாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியாக, நெட்டிசன்கள் கொதித்துப் போய், கண்டிக்க தற்போது இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன இதில்?
News February 26, 2025
மகா சிவராத்திரி.. கோயிலில் காணாமல் போன சிவலிங்கம்!

சிவராத்திரிக்கு தயாரான பக்தர்களுக்கு கோயிலை திறந்து பார்த்ததுமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். ஆனால், அவர்கள் வேறு எந்த பொருளையும் சீண்டவில்லை. அரபிக்கடல் கடற்கரையில் குஜராத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. லிங்கத்தை கடலில் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், தற்போது Deep Sea Diversஐ வைத்து தேடும் பணி தொடர்கிறது. இன்னைக்குள் கிடைச்சிருமா?