News February 26, 2025
மாநில உரிமையில் ஒன்று சேர வேண்டும்: சீமான்

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ‘மாநில உரிமை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும்’ என சீமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் ஒருமித்த குரலாக எதிர்க்க வேண்டும் எனக்கூறிய அவர், சீர்த்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News February 26, 2025
ரெய்டு அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்: அம்மன் அர்ஜூனன்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கூறியுள்ளார். 13 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக, வரும் தேர்தலிலும் தோல்வி அடையும் என்றார்.
News February 26, 2025
ஞானசேகரனின் தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
News February 26, 2025
ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா – கேரளா மோதல்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இன்று விதர்பா – கேரளா அணிகள் மோதுகின்றன. 90வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. விதர்பா அணி 3வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.