News February 25, 2025

BREAKING: 10ஆம் வகுப்பு இருமுறை பொதுத்தேர்வு

image

2026 கல்வியாண்டு முதல் CBSE 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவு விதிகளுக்கு CBSE ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி முதல் மார் வரையிலும், 2ஆம் கட்ட பொதுத்தேர்வு மே மாதமும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தேர்வுகளும் ஒரே தேர்வு மையத்தில் தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 26, 2025

அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

image

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News February 26, 2025

பாகிஸ்தானை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர்: ரமீஸ் ராஜா

image

CT தொடரில் இருந்து PAK அணி திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக பாக்., முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும் எனவும், நியூசிலாந்துடன் மோதும் வகையில் ஐசிசி அட்டவணை தயாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசி மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த PAK அணி CT தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

News February 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 190
▶குறள்:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
▶பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.

error: Content is protected !!