News March 30, 2024
20 ஆண்டுக்குப் பின்… இருவர்

20 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் பிரனாய் (9), லக்சயா (16) ஆகிய இரு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அபின் ஷ்யாம், நிகில் கனேட்கர் என இரு வீரர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 8, 2025
4,000 ஆண்டுகளாக எரியும் தீ; அணையாத மர்மம்

புயல், மழை, பனி, சூறைக்காற்று என எதற்கும் அணையாத தீயை பார்த்ததுண்டா?அசர்பைஜானில் 4000 ஆண்டுகளாக ’யனார் தாக்’ என்ற மலை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயு கசிவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது என்கின்றனர். ஒரு காலத்தில் இதுபோன்ற மலைகள் அந்நாட்டில் அதிகமான இருந்தன. காலப்போக்கில் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கியதால் தற்போது இந்த ஒரு மலைதான் தப்பியுள்ளது.
News November 8, 2025
உதயநிதிக்கு புதிய பட்டம் கொடுத்த CM ஸ்டாலின்!

அறிவு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என உதயநிதியிடம் CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். திமுகவின் 75வது அறிவுத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர், உதயநிதியை ‘கொள்கை இளவல்’ என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். மேலும், திமுகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை எனவும், திமுக போல் வெல்லவேண்டும் என்றால் இக்கட்சியை போல அர்ப்பணிப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.


