News February 25, 2025

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

image

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News February 26, 2025

பாகிஸ்தானை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர்: ரமீஸ் ராஜா

image

CT தொடரில் இருந்து PAK அணி திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக பாக்., முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும் எனவும், நியூசிலாந்துடன் மோதும் வகையில் ஐசிசி அட்டவணை தயாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசி மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த PAK அணி CT தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

News February 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 190
▶குறள்:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
▶பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.

News February 26, 2025

KKR அணியை வழிநடத்த தயார்: வெங்கடேஷ் ஐயர்

image

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் அணியை வழிநடத்த தயாராக அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் தனக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!