News February 25, 2025
தற்காலிக பணியாளர்களை நீக்க உத்தரவு

2020க்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் மேல்முறையீட்டு வழக்கில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 10, 2026
பார்லிமென்ட் நடக்க ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா?

பார்லிமென்ட் அவை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹2.50 லட்சம் செலவாவதாக சபாநாயகர் (பொறுப்பு) ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி MP-க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு ₹9 கோடி செலவாகிறது. ஆனால், மக்கள் பணத்தை எதிர்க்கட்சி MP-க்கள் வீணடிப்பதாக சாடியுள்ளார்.
News March 10, 2026
ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.
News March 10, 2026
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.


