News February 25, 2025
நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை பரிந்துரைப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
Similar News
News July 8, 2025
10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
தென்காசியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

தென்காசி, சங்கரன்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (விவசாயி). நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. உடனே அவரது உறவினர்கள் மாரியப்பனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.