News February 25, 2025
#FairDelimitationForTN ட்ரெண்டிங்

#FairDelimitationForTN என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 2026இல் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மாற்றம் செய்யும்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ல் இருந்து 31ஆக குறைக்கும் அபாயம் உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.
Similar News
News February 26, 2025
நாய்க்குட்டிக்காக கண்ணீர் விட்ட த்ரிஷா

நடிகை த்ரிஷா வளர்த்த ஸோரோ இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனால், மனமுடைந்த அவர், பணிகளில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, ஸோரோவின் இரண்டாவது மாத நினைவு நாளுக்கு அவர் விளக்கேற்றி மரியாதை செய்தார். இதுகுறித்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தற்போது அவருடன் இருக்கும் நாய்க்குட்டியான இஸ்ஸியை அனுப்பியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
News February 26, 2025
ராசி பலன்கள் (26.02.2025)

மேஷம் – பக்தி, ரிஷபம் – நன்மை, மிதுனம் – சிந்தனை, கடகம் – பரிசு, சிம்மம் – உற்சாகம், கன்னி – அனுகூலம், துலாம் – வெற்றி, விருச்சிகம் – உயர்வு, தனுசு – குழப்பம், மகரம் – நற்செய்தி, கும்பம் – உதவி, மீனம் – புகழ்.
News February 26, 2025
இந்த பள்ளிகளில் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயம்

தெலங்கானாவில் CBSE, ICSE உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10ம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, 1 – 8ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு தெலுங்கை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று ஆளும் குற்றஞ்சாட்டியுள்ளது.