News February 25, 2025
காப்பீட்டு தொகையாக ரூ, 235 ,000/-ம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

மன்னார்குடி பகுதி சேர்ந்த ராஜலட்சுமி, தனது மகனின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்த மன்னார்குடி பொதுத்துறை வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்க இணைச் செயலாளர் வேல்முருகன் மூலம் வழக்கு தொடர்ந்தார். சேவை குறைபாட்டை ஏற்படுத்திய வங்கி நிர்வாகம் ராஜலட்சுமியிடம் இழப்பீடாக ரூ 2,35,000 வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டனர்.
Similar News
News July 8, 2025
திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News July 7, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 54 நகர்ப்புற முகாம்கள் 131 ஊரக முகாம்கள் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 15 திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி வட்டத்திலும்; ஜூலை 17ஆம் தேதி நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், பேரளம் பகுதியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.