News March 30, 2024
இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் இன்று கீழையூர் கிழக்கு ஒன்றியம் திருப்பூண்டியில் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் இந்தியா கூட்டனி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்கு சேகரித்தார். உடன் கீழையூர் திமுக கழக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். திருப்பூண்டி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
Similar News
News October 31, 2025
நாகை: மாணவியிடம் அத்துமீறிய போலீஸ் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரைச் சேர்ந்த காவலர் குணா (37), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 31, 2025
நாகை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
நாகை: ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்கள் சப்த விடங்க தலங்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர். வரும் நவ.9-ம் தேதி தொடங்கி நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு செல்லும் இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக ரூ.1800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/T1wvCrYPR7mq3D3U8 வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.


