News February 25, 2025

மகா சிவராத்திரியில் இங்கு வழிபட்டால் தொழில் தடை நீங்கும்

image

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவில். 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த சிவாலயம் பற்றி கந்தபுராணத்தில் குறிப்பு உள்ளது. மகா சிவராத்திரி தினத்தன்று அதாவது நாளை இக்கோவிலில் உள்ள பூலாநந்தீஸ்வரரை வணங்கினால் தொழிலில் தடை நீங்கி, லாபம் அடைவர் என்பது ஐதீகமாக உள்ளது. தடை நீங்க உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

Similar News

News November 12, 2025

தேனியில் 20 பணியிடங்களுக்கு 6,324 விண்ணப்பங்கள்

image

தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள 1450 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு கடந்த அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு 6324 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

News November 12, 2025

தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக் செய்து<<>> Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

image

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!