News February 25, 2025
பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நேற்று கிலோ ₹400க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இன்று கிலோ ₹1,200க்கும், ₹300க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ ₹1,000க்கும் விற்பனையாகிறது. மேலும், சீசன் முடிந்துவிட்டதால் மல்லிகை பூ வரத்து குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
Similar News
News February 25, 2025
விஜய் கட்சியில் இணையும் நடிகை மற்றும் பிரபலங்கள்

மாமல்லபுரத்தில் நாளை தவெக 2ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மூன்று முக்கிய பிரபலங்கள் இணையவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. நாதகவில் இருந்து நேற்று விலகிய காளியம்மாள், பாஜகவில் இருந்து இன்று விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த மருது அழகுராஜ் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
News February 25, 2025
டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற DCW அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய GGW அணி, 20 ஓவர்களில் 127/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். DCW தரப்பில் ஷிகா பாண்டே, மரிஜன், அனபெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
News February 25, 2025
BREAKING: 10ஆம் வகுப்பு இருமுறை பொதுத்தேர்வு

2026 கல்வியாண்டு முதல் CBSE 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவு விதிகளுக்கு CBSE ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி முதல் மார் வரையிலும், 2ஆம் கட்ட பொதுத்தேர்வு மே மாதமும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தேர்வுகளும் ஒரே தேர்வு மையத்தில் தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.