News February 25, 2025
₹18 கோடி கடன் தள்ளுபடி? ப்ரீத்தி ஆவேசம்

பாஜக ஆதரவாளராக மாறியதால், ப்ரீத்தி ஜிந்தாவின் ₹18 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, கேரள காங். கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கடனை அடைத்து கணக்கை மூடிவிட்டதாகவும், ஒரு அரசியல் கட்சி பொய் செய்திகளை பரப்புவது வெட்கக்கேடானது எனவும் அவர் தனது X பக்கத்தில் சாடியுள்ளார். மேலும், தனக்காக யாரும் கடனை தள்ளுபடி செய்யவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
News February 25, 2025
பிரதமரின் ₹2,000 இன்னும் வரவில்லையா?

PM கிசான் திட்டத்தின் 19ஆவது தவணையான ₹2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை இன்னும் கிடைக்கப்பெறாத விவசாயிகள், PM கிசான் இணையதளத்தில் Beneficiary List பக்கம் சென்று, உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு GET Report என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் பெயர் இருந்தும், பணம் வரவில்லை என்றால், 1800-11-5526, 155261, 011-23381092, 23382401 எண்களில் புகார் அளிக்கலாம்.
News February 25, 2025
பணிக்கு வராத 63 ஆயிரம் ஆசிரியர்கள்?

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் காரணமாக 48,000 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 15,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐகோர்ட் தடை விதித்த நிலையிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.