News February 25, 2025

BREAKING: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

பல்வேறு மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (பிப்.27) தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், பிப்.28இல் சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 1ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என IMD குறிப்பிட்டுள்ளது.

Similar News

News February 25, 2025

சிவராத்திரியில் 50 ஆண்டுகள் கழித்து.. 3 ராசிக்கு ஜாக்பாட்!

image

மகாசிவராத்திரி அன்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்கிரக யோகம் (சூரியன், புதன், சந்திரன், சனி சேர்க்கை) நிகழ்கிறது *மிதுன ராசிக்கு வெளிநாட்டு யோகம் வரும். பணியில் மரியாதை கிடைக்கும். சுப காரியம் நிகழும் *துலாம் ராசிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆபீஸில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும் *மகர ராசிக்கு துக்கம் விலகும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.

News February 25, 2025

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

image

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News February 25, 2025

பிரதமரின் ₹2,000 இன்னும் வரவில்லையா?

image

PM கிசான் திட்டத்தின் 19ஆவது தவணையான ₹2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை இன்னும் கிடைக்கப்பெறாத விவசாயிகள், PM கிசான் இணையதளத்தில் Beneficiary List பக்கம் சென்று, உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு GET Report என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் பெயர் இருந்தும், பணம் வரவில்லை என்றால், 1800-11-5526, 155261, 011-23381092, 23382401 எண்களில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!