News February 25, 2025
₹500 நோட்டில் ஹிந்தியை அழிக்க முடியுமா? H.ராஜா

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என CM ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி புகைந்து வருகிறது. இந்த சூழலில், ஹிந்தியை எதிர்ப்பதென்றால் ₹500 நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழித்து பாருங்கள் என H.ராஜா சவால் விடுத்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 25, 2025
பணிக்கு வராத 63 ஆயிரம் ஆசிரியர்கள்?

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் காரணமாக 48,000 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 15,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐகோர்ட் தடை விதித்த நிலையிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 25, 2025
நாடகத்துக்கு ஸ்க்ரிப்ட் ரெடி செய்யும் ஸ்டாலின்: பாஜக

இந்தி திணிப்பு நாடகம் ஃப்ளாப் ஆன உடன் டீலிமிடேஷன் நாடகத்துக்கு ஸ்க்ரிப்ட் ரெடி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்; இதுவும் கண்டிப்பா மெகா ஃப்ளாப் தான் என்று TN பாஜக விமர்சித்துள்ளது. நாலு வருட ஆட்சியில் தமிழகத்தை நாசமாக்கியாச்சு! மீதியிருக்கும் ஒரு வருடத்திலாவது போலி நாடகங்களை அரங்கேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு விஸ்வாசமாக இருங்கள் என அறிவாலயம் என்ற தலைப்பில் ஸ்டாலினின் கார்டூனையும் வெளியிட்டுள்ளது.
News February 25, 2025
கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்

கனடாவின் புதிய குடியுரிமை விதிகள் அங்கு வசிக்கும், செல்லும் பிற நாட்டினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதிய விதிகளின் படி, இனி அதிகாரிகள் விசாக்களை ரத்து செய்ய முடியும். விசா காலம் முடிந்த பிறகும் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அதிகாரி கருதினால், விசா காலம் முடியும் முன்னரே அவரது விசாவை ரத்து செய்யலாம். இதனால் அங்கு படிக்கும், வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.