News February 25, 2025

SSLC தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..

image

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பிப்.25 முதல் பிப்.28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் அசல் செய்முறைப்பயிற்சி அத்தாட்சி சான்றிதழுடன் நாளை முதல் அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுதலாம். தேர்வர்கள் தவறாமல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் செய்முறை தேர்வை எழுத வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Similar News

News March 12, 2026

தஞ்சை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

தஞ்சை: அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்பிடி, அதிமுக சார்பில் சோழபுரம் கடைவீதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் தலைமை பேச்சாளர் துகிலி நல்லிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு சேலை வழங்கினர்.

News March 12, 2026

தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுகோட்டை, ஒரத்தநாடு பேராவூரணி, பாபநாசம் வருவாய் அலுவலகத்திலும் இன்று (மார்ச் 12) நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில், பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!