News February 25, 2025

ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு: 22 பேர் மீது வழக்கு பதிவு

image

மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தினமும் விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பாதசாரிகள் கவனமாக இருக்கவும், சீட் பெல்ட்டை பயன்படுத்தவும், போக்குவரத்து விதிகள்& விதிமுறைகளைப் பின்பற்றவும், தூக்கம் வந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் அணியுங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் போன்றவற்றை விளக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. இதை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

News August 13, 2025

ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கிகளில் வேலை!-APPLY NOW

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் 45 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டையில் (04172-270050) கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

ராணிப்பேட்டையில் 4,406 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ராணிப்பேட்டையில் 4,406 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

error: Content is protected !!