News February 25, 2025
IND அணிக்கு கூடுதல் சாதகம்: கம்மின்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளதாக AUS வீரர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக உள்ள இந்திய அணிக்கு உதவும் எனவும், ஒரே மைதானத்தில் மொத்த தொடரையும் விளையாடுவது, அந்த மைதானத்தை வீரர்கள் முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். காயம் காரணமாக AUS அணியில் கம்மின்ஸ் இடம்பெறவில்லை.
Similar News
News February 25, 2025
5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?