News February 25, 2025
5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News February 25, 2025
BREAKING: காங்கிரஸ் EX எம்.பி.க்கு ஆயுள் தண்டனை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் EX எம்.பி. சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் 1984இல் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
News February 25, 2025
300 பேரை பலாத்காரம் செய்த டாக்டர்

பிரான்ஸில் 300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் ஜோயல் லீ ஸ்குவார்நெக் மீதான விசாரணையை அந்நாட்டு கோர்ட் தொடங்கியுள்ளது. 1989-2014 காலகட்டத்தில், நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், செக்-அப்பின் போதும் இந்த கொடுஞ்செயலை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 256 பேர் சிறுவர்கள். அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் வழக்காக கருதப்படும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 25, 2025
செமி ஃபைனலில் IND யாருடன் மோதும்?

குரூப் ஏ பிரிவில் IND அணி முதலிடத்தில் இருந்தால், குரூப் பி பிரிவில் 2ஆவது இடத்தில் இருக்கும் AUS அணியை CT செமி ஃபைனலில் எதிர்கொள்ளும். ஒருவேளை, 2ஆம் இடத்தை பிடித்தால், குரூப் பி-இல் முதலிடத்தில் இருக்கும் SAவுடன் மோத நேரிடும். இன்னும் சில போட்டிகள் மிச்சமிருந்தாலும், IND மேற்கூறிய 2 அணிகளில் ஏதாவது ஒன்றை தான் எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ENGஐ எதிர்கொள்ளும்.