News February 25, 2025

5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

image

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Similar News

News March 18, 2026

ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் சிக்கல்

image

‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை மறுதணிக்கை குழுவிடம் காண்பிக்க படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிவரை காத்திருந்ததாகவும், ஆனால் இறுதிவரை ஸ்கிரீனிங் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து வரவேண்டிய உறுப்பினர்கள் சென்னைக்கு வரவில்லையாம். மறுதணிக்கை குழு படத்தை எப்போது பார்க்கும் என்ற தகவலும் உறுதியாக தெரியவில்லை.

News March 18, 2026

ஆண்மையற்றவர் எனப் பொய் புகார் கூறுவது மனக் குரூரம்: HC

image

ஆண்மையற்றவர் என்று கணவன் மீது பொய் குற்றம்சாட்டுவது மனக்குரூரம் என ஜார்கண்ட் HC கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்மையின்மை குற்றச்சாட்டு கணவரின் நற்பெயரை பாதிக்கும் என்பதுடன், தீவிர மனவேதனையை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விவாகரத்து வழங்கிய குடும்ப நல கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இக்கருத்தை தெரிவித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.

News March 18, 2026

திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

image

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!