News February 25, 2025

அருப்புக்கோட்டை தபால் நிலையத்தில் ரூ.5 கோடி கையாடல்

image

அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றிய அமர்நாத் என்பவர் கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை அவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்ததாக 18.5.2024 அன்று வழங்கு பதியப்பட்டது. இதில் 9 மாதமாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று பந்தல்குடி தனியார் விடுதியில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்து ரூ.4,58,90,068 மீட்டுள்ளனர்.

Similar News

News October 30, 2025

விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

image

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2025 ஆகும். ரயில்வே துறையில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News October 30, 2025

விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 30, 2025

சிவகாசி அருகே இளம்பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது

image

சிவகாசி அருகே ரிசர்வ்லையன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்-கவிதா (30)தம்பதி. கருத்து வேறுபாட்டால் கவிதாவை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதால் சேகர்(33) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சேகர் குடித்துவிட்டு கவிதாவை தாக்கினார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதால் கவிதாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டினார்.

error: Content is protected !!