News February 25, 2025
குமரியில் திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்து

தவக்காலத்தை யொட்டி குமரியில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, ராஜாவூர் உள்பட 17 கிறித்துவ திருத்தலங்களுக்கு திருப்பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 5-ந்தேதி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் தினமும் காலை 6-30 மணிக்கு வடசேரியில் இருந்து புறப்பட்டு மீனாட்சிபுரம் வழியாக சென்று இரவு 7-15 மணிக்கு குளச்சல் புதூர் திருத்தலத்தை சென்றடைகிறது.
Similar News
News March 11, 2026
போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 10, 2026
குமரி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி வில்சன்(56). இவர் அருகில் உள்ள வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச்சென்றார். அப்போது மரத்தில் ஏறும்போது தென்னை ஓலை அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து வில்சன் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 10, 2026
குமரி: சிலிண்டர் புக் செய்ய முடியாமல் மக்கள் அவதி

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.


