News February 25, 2025
நாளையுடன் நிறைவடைகிறது மகாகும்பமேளா

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நாளையுடன் நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாகும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக உ.பி CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த மகாகும்பமேளா மகாசிவராத்திரி தினமான நாளை நிறைவடைகிறது. இதனால் திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 25, 2025
விவேக் ராமசாமியின் அடுத்த டார்கெட்

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். டிரம்ப் அரசில் அரசாங்க திறன் துறை (DOGE) பொறுப்பில் இருந்து விலகிய சில நாள்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தொழில் தொடங்குவது, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டிலேயே சிறந்த மாகாணமாக ஓஹியோவை மாற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
News February 25, 2025
காற்று மாசு: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகில் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2024ல் அதிக மாசடைந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. காற்றின் தரக் குறியீடு (AQI) அடிப்படையில் முதல் 10 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. அதில் 140 AQI கொண்ட நாடாக வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. 115 AQIயுடன் 2ம் இடத்தில் பாகிஸ்தானும், 111 AQIயுடன் 3ம் இடத்தில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளன.
News February 25, 2025
நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவிலிருந்து விலகல்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் தான், சில மாதங்களுக்கு முன்பு பஸ்ஸில் ஃபுட் போர்ட் அடித்த மாணவர்களை பொதுவெளியில் ‘பளார்’ என அறைந்தவர். சினிமா துணை நடிகையாகவும் இருக்கும் இவர், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.