News February 25, 2025

மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய 4 கால பூஜை மந்திரம்

image

சிவராத்திரியின் 4 கால பூஜையில் ஈசனுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். அதன்படி, முதல் கால பூஜையில் (இரவு 7:30 மணி) ‘ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்’ *2ம் கால பூஜையில் (இரவு 10:30 மணி) ‘ஓம் ஈசனே போற்றி போற்றி’ *3ம் கால பூஜையில் (இரவு 12:00 மணி) ‘ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி’ *4ம் கால பூஜையில்(அதிகாலை 4:00 மணி) ‘ஓம் சிவ சிவ போற்றி ஓம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

Similar News

News February 25, 2025

விவேக் ராமசாமியின் அடுத்த டார்கெட்

image

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். டிரம்ப் அரசில் அரசாங்க திறன் துறை (DOGE) பொறுப்பில் இருந்து விலகிய சில நாள்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தொழில் தொடங்குவது, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டிலேயே சிறந்த மாகாணமாக ஓஹியோவை மாற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

News February 25, 2025

காற்று மாசு: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

image

உலகில் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2024ல் அதிக மாசடைந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. காற்றின் தரக் குறியீடு (AQI) அடிப்படையில் முதல் 10 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. அதில் 140 AQI கொண்ட நாடாக வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. 115 AQIயுடன் 2ம் இடத்தில் பாகிஸ்தானும், 111 AQIயுடன் 3ம் இடத்தில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளன.

News February 25, 2025

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவிலிருந்து விலகல்

image

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் தான், சில மாதங்களுக்கு முன்பு பஸ்ஸில் ஃபுட் போர்ட் அடித்த மாணவர்களை பொதுவெளியில் ‘பளார்’ என அறைந்தவர். சினிமா துணை நடிகையாகவும் இருக்கும் இவர், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.

error: Content is protected !!