News February 25, 2025
நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை

பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை அளிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
News February 25, 2025
BREAKING: தங்கம் விலை மேலும் உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.8,055க்கும், ஒரு சவரன் ரூ.64,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், தங்கம் இன்று 1 கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.64,600க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.08 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
News February 25, 2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*படிக்கும் போது, முக்கியமான பாயிண்ட்ஸை அடிக்கோடிட்டு, வையுங்கள். இல்லை, வேறோரு கலர் கொடுத்து முக்கியமான பாயிண்ட்ஸை மார்க் செய்யவும் *முதல் முறை படிக்கும் போதே, பதிலுக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு படித்து விடுங்கள் * அனைத்து பாடங்களையும் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்க வேண்டாம். அது மூளையை டயர்ட் ஆக்கும் *தயவு செய்து மனப்பாடம் செய்யாதீர்கள். தைரியமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!