News February 25, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

Similar News

News February 25, 2025

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

image

*படிக்கும் போது, முக்கியமான பாயிண்ட்ஸை அடிக்கோடிட்டு, வையுங்கள். இல்லை, வேறோரு கலர் கொடுத்து முக்கியமான பாயிண்ட்ஸை மார்க் செய்யவும் *முதல் முறை படிக்கும் போதே, பதிலுக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு படித்து விடுங்கள் * அனைத்து பாடங்களையும் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்க வேண்டாம். அது மூளையை டயர்ட் ஆக்கும் *தயவு செய்து மனப்பாடம் செய்யாதீர்கள். தைரியமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!

News February 25, 2025

உக்ரைன் அடிபணிய தேவையில்லை: பிரான்ஸ்

image

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து US அதிபர் டிரம்புடன் ஆலோசித்ததாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். டிரம்புடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைதிக்காக உக்ரைன் அடிபணிய வேண்டிய அவசியம் ஏற்படாது. உக்ரைனின் இறையாண்மையை காக்கும் வகையில் அந்த அமைதி இருக்கும் என்றார். அடுத்த வாரம் உக்ரைனுடன் அரிய இயற்கை வளங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக டிரம்ப் கூறினார்.

News February 25, 2025

5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

image

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!