News February 25, 2025
அதிஷி குற்றச்சாட்டை மறுத்த பாஜக

டெல்லி முதல்வர் அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளதாக அதிஷி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால் மட்டுமே இதுவரை பொய் பேசுவார் என நினைத்திருந்ததாகவும், அவரையே அதிஷி விஞ்சி விட்டதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. முன்னதாக, டெல்லி முதல்வர் அறையில் AAP ஆட்சியில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பகத்சிங் புகைப்படம் அகற்றப்பட்டதாக அதிஷி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News February 25, 2025
கும்பமேளாவில் கின்னஸ் சாதனை முயற்சி

மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் சத்தமே இல்லாமல் கின்னஸ் உலக சாதனை படைக்கப்படவுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் திரிவேணியில் புனித நீராடிய நிலையில், நதி பாயும் இடங்களில் எல்லாம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த ஒரே நேரத்தில் 15,000 தூய்மை பணியாளர்களை பல்வேறு இடங்களில் களமிறக்கி இந்த சாதனை முயற்சி படைக்கப்படவுள்ளது. இதற்கான முடிவுகள் வரும் 27 ஆம் தேதி வெளியாகும்.
News February 25, 2025
ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் பொருள்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருள்களையும் வழங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பொருள்களும் தரத்துடன் இருப்பதையும், எடை சரியாக இருப்பதையும் உறுதி செய்யவும் ஆணையிட்டார். அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
News February 25, 2025
உலகளவில் ஊழியர்களை நீக்கும் ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 1,100 கார்ப்பரேட் ஊழியர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. யாரெல்லாம் நீக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இன்று மதியம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப மாட்டோம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் காபி பார்களில் பணிபுரியும் பாரிஸ்டாக்கள் பணிநீக்கத்தில் சேர்க்கப்படவில்லை.