News February 25, 2025
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது: காங்கிரஸ்

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு TN CONG தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற மத்திய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ், தமிழர்கள் என்றாலே பாஜக வெறுப்பை காட்டுவதாகவும், இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News February 25, 2025
நாளையுடன் நிறைவடைகிறது மகாகும்பமேளா

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நாளையுடன் நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாகும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக உ.பி CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த மகாகும்பமேளா மகாசிவராத்திரி தினமான நாளை நிறைவடைகிறது. இதனால் திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 25, 2025
மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய 4 கால பூஜை மந்திரம்

சிவராத்திரியின் 4 கால பூஜையில் ஈசனுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். அதன்படி, முதல் கால பூஜையில் (இரவு 7:30 மணி) ‘ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்’ *2ம் கால பூஜையில் (இரவு 10:30 மணி) ‘ஓம் ஈசனே போற்றி போற்றி’ *3ம் கால பூஜையில் (இரவு 12:00 மணி) ‘ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி’ *4ம் கால பூஜையில்(அதிகாலை 4:00 மணி) ‘ஓம் சிவ சிவ போற்றி ஓம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
News February 25, 2025
திமுகவினர் ED அலுவலகம் செல்லலாம்: அண்ணாமலை

இந்தி எழுத்துக்களை அழிக்கும் திமுகவினர் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி அலுவலகத்துக்கும் செல்லுமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு அலுவலகங்களின் முகவரிகள் தெரியவில்லை என்றால், இங்கு அடிக்கடி செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். கருப்பு பெயிண்ட் டப்பாவை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.