News February 25, 2025
அங்கீகாரம் இல்லாத 6,000 பிளே ஸ்கூல்கள்

மாநிலம் முழுவதும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட பிளே ஸ்கூல்கள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாதுகாப்பின்றி மாடி கட்டடம், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், விளையாட இடம் இல்லாதது உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் இந்த ஸ்கூல்கள் இயங்குகின்றன. ஆபத்தை உணராமல் வேலைக்கு செல்லும் பெற்றோர், குழந்தைகளை இங்கு சேர்க்கின்றனர். இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
Similar News
News February 25, 2025
காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News February 25, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.