News March 30, 2024
வள்ளலாரின் பொன்மொழிகள்

✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை; உண்மையைச் சொல் அது மரியாதையை காக்கும்.✍எல்லா உயிர்களிடத்திலும் இறை வியாபித்திருக்கிறார் என்று அறிதலே மெய்யியலின் மெய். ✍பாவம், புண்ணியம் என்பன மனம், சொல், செயல் ஆகிய முவ்வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்.✍சோதனைகளே ஒருவருக்கு அவரை அவருக்கே யாரென அறிமுகப்படுத்துகிறது.
Similar News
News November 8, 2025
4,000 ஆண்டுகளாக எரியும் தீ; அணையாத மர்மம்

புயல், மழை, பனி, சூறைக்காற்று என எதற்கும் அணையாத தீயை பார்த்ததுண்டா?அசர்பைஜானில் 4000 ஆண்டுகளாக ’யனார் தாக்’ என்ற மலை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயு கசிவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது என்கின்றனர். ஒரு காலத்தில் இதுபோன்ற மலைகள் அந்நாட்டில் அதிகமான இருந்தன. காலப்போக்கில் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கியதால் தற்போது இந்த ஒரு மலைதான் தப்பியுள்ளது.
News November 8, 2025
உதயநிதிக்கு புதிய பட்டம் கொடுத்த CM ஸ்டாலின்!

அறிவு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என உதயநிதியிடம் CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். திமுகவின் 75வது அறிவுத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர், உதயநிதியை ‘கொள்கை இளவல்’ என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். மேலும், திமுகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை எனவும், திமுக போல் வெல்லவேண்டும் என்றால் இக்கட்சியை போல அர்ப்பணிப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.


