News March 30, 2024
மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையமே மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல தெரிகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சின்னத்தைக் கூட கொடுக்க மறுக்கிறது. இதற்கெல்லாம் மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News March 24, 2026
தேர்தல் கருத்துக்கணிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட ECI கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்.9-ம் தேதியும், TN-ல் ஏப்.23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என ECI உத்தரவிட்டுள்ளது.
News March 24, 2026
BREAKING: விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக ‘பானை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, தற்போது கூடுதலாக 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வந்தார்.
News March 24, 2026
பணக்கார வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரி தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், அசையும் சொத்து ₹328 Cr, அசையா சொத்து ₹269 Cr என மொத்தம் ₹597 Cr சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ₹25 Cr-க்கு 17.5 கிலோ தங்கம், ₹44 Cr-க்கு வைரம், ₹38 Cr-க்கு வாட்ச் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி CM-ஐ விட அதிக சொத்து வைத்திருக்கும் வேட்பாளர் இவர்.


