News February 24, 2025

ரூ.2000 வந்தாச்சு… உடனே செக் பண்ணுங்க

image

விவசாயிகளுக்கான PM Kisan உதவித் தொகையின் 19-வது தவணையை, இன்று பிஹாரில் பாகல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற தகுதியான விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க.

Similar News

News February 25, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News February 25, 2025

PF பயனாளர்களுக்கு அதிக வட்டி?

image

PF சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் இனிப்பான செய்தி ஒன்று வெளியாகவிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான PF வட்டி எவ்வளவு வழங்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு அதிக வட்டியான 8.25% வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் அதே அளவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், முதலீடு செய்யப்பட்ட PF தொகை அதிக லாபம் கொடுத்திருப்பதால் அதிக வட்டிக்கு வாய்ப்புண்டு.

News February 25, 2025

100 நாள் வேலை: நிதி வந்தவுடன் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு

image

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலையில் 86% பெண்களும், 27% தாழ்த்தப்பட்ட சமுதாயனத்தினரும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பயனாளிகளுக்கான ஊதிய நிலுவை ₹2,400 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மத்திய அரசு நிதியை விடுவித்ததும் உடனடியாக அவர்களுக்கு அத்தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

error: Content is protected !!