News February 24, 2025
அரசு ஊழியர்கள் போராட தடை!

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது: டிரம்ப்

ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் உருவாக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஈரான் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகளை மறுப்பதோடு, இது போலியான தகவல் என்று கூறுகின்றனர். மேலும் 5 நாள் காலக்கெடுவுக்குப் பின் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று டிரம்ப் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
News March 25, 2026
IPL அணியை உருவாக்குவது மிக கடினம்: கங்குலி

இந்திய அணியை உருவாக்குவதை விட IPL அணியை உருவாக்குவதே கடினம் என்று கங்குலி கூறியுள்ளார். IPL-ல், வீரர்கள் 10 அணிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். தரமான வீரர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை என்றால் அது அணியின் சமநிலையை பாதிக்கும் என்றார். மேலும், மிட்செல் ஸ்டார்க்கின் லீக்கின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில், DC அணியின் இயக்குநராக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
News March 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 643 ▶குறள்: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் ▶பொருள்: கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.


