News February 24, 2025
அரசு ஊழியர்கள் போராட தடை!

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 24, 2025
நியூசி., அபார வெற்றி.. வெளியேறிய பாக்.,

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசி., அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசி., 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசி., இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், பாக்., வங்கதேசம் தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது.
News February 24, 2025
BREAKING: அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், 11 லட்சம் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2025
கேரளாவை உலுக்கிய பயங்கரம்: 6 பேர் கொடூரமாக கொலை

இன்று கேரளாவில் நடந்துள்ள கொடூரச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மதுவுக்கு அடிமையான இளைஞர் அஃபான், 6 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளான். இன்று மாலை 4 மணியளவில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அம்மா, பாட்டியை வெட்டிக் கொலை செய்த அந்த கொடூரன், தனது தம்பி & அவரது காதலியை தீர்த்துக் கட்டியிருக்கிறான். அதன்பின் தம்பி காதலியின் பெற்றோரையும் விட்டுவைக்கவில்லை. அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.