News February 24, 2025

பரிசு தருவதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை

image

கரூர் கிருஷ்ணாபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசு தருவதாக அழைத்து, 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் மாணவியின் கழுத்தை மாணவர்கள் அறுத்த கொடூரமும் நடந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ள சிறுமி அளித்த தகவலின்படி ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News February 24, 2025

3 பெண்கள் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

image

தருமபுரியில் தனியார் <<15565302>>பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில்<<>> இறந்தவர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறிய அவர், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

News February 24, 2025

நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

image

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

News February 24, 2025

ரூ.2000 வந்தாச்சு… உடனே செக் பண்ணுங்க

image

விவசாயிகளுக்கான PM Kisan உதவித் தொகையின் 19-வது தவணையை, இன்று பிஹாரில் பாகல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற தகுதியான விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க.

error: Content is protected !!