News March 30, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: களவியல்
▶ அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் ▶ எண்: 1105
▶குறள்:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
▶ பொருள்: ஒருவருக்கு விருப்பமான பொருள் ஒன்று, நாம் நினைக்கும் பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த என் காதலியை கட்டியணைக்கும்போது, அவளது தோள்கள் இன்பம் வழங்குகின்றன.
Similar News
News October 23, 2025
5 நிமிடம் இத பண்ணுங்க.. உடல் புத்துணர்ச்சி பெறும்

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவித்தார்

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.
News October 23, 2025
இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி

மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இப்போது இந்திய அணி போராடி வருகிறது. அதற்கு இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய கடைசி 3 போட்டிகளில் சொதப்பியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு இந்தியா திரும்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.