News February 24, 2025
புதுவையில் கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த சில தினங்கள் முன்பு ரவுடி ரஷி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசாருடன், கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரண்டாவது நாளாக அணிவகுப்பு சென்றனர்.
Similar News
News February 24, 2025
புதுச்சேரியில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி

புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வரும் மார்ச் மாதம் 03.03.2025 முதல் 08.03.2025 ஆம் தேதி வரை ”தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு மேலாண்மை” குறித்த ஆறு நாட்கள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
News February 24, 2025
தேர்வு அச்சத்தை போக்க 14416 எண்ணிற்கு டயல் செய்யுங்கள்

புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருந்து விடுபட கட்டணமில்லாத 14416 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மனநல துறை டாக்டர் பாலன் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். தேர்வு பயம் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாத தொலைபேசி 14416 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம்’.
News February 23, 2025
புதுச்சேரி காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றம்

புதுச்சேரி மாநிலத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை பயிற்சி அரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்.