News February 24, 2025
PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Similar News
News February 24, 2025
ஒற்றைத் தலைமையே தொடர் தோல்விக்கு காரணம்: OPS

அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றைத் தலைமையே காரணம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக இபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடியுள்ளார்.
News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
News February 24, 2025
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்

கோவையில் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா வளர்த்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் என 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக, பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.