News February 24, 2025
சச்சினின் சாதனையை சமன் செய்த கிங் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். சச்சின் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 100 சதங்களை அடித்துள்ள நிலையில், கோலி 82 சதங்களை நிறைவு செய்துள்ளார்.
Similar News
News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
News February 24, 2025
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்

கோவையில் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா வளர்த்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் என 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக, பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 24, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தைகள் சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சென்செக்ஸ் 753 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 233 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஐடி துறைகளின் பங்குகள் 2% அளவுக்கு வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின. இந்திய பொருட்கள் மீது டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல் ஆகியவை பங்குச் சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.