News February 24, 2025

கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் 2 பேர் பலி

image

கேரளாவில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். வனப்பகுதியில் தம்பதியரான வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். யானை தாக்குல் தொடர்ந்து நடக்கும் நிலையில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News February 24, 2025

பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட ‘டிராகன்’ இயக்குநர்

image

பெற்றோரிடம் தான் கேட்கும் மன்னிப்பு தான் ‘டிராகன்’ படம் என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். தான் டாக்டராக வேண்டும் என்ற அவர்களின் கனவை நிறைவேற்றாமல் போனதற்கும், ஒரு அடங்காத இன்ஜினியரிங் மாணவனாக இருந்ததும் தவறு என பின்னாட்களிலேயே புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘டிராகன்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

News February 24, 2025

ரேஷன் கடைகளுக்கு சென்று E-KYC செக் பண்ணுங்க

image

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் E-KYC செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், புதிதாக யாருக்கேனும் ஆதார் எடுக்கப்பட்டிருந்தால் அவர்களது விபரங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். KYC சரிபார்ப்பு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

News February 24, 2025

திமுக அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

image

TNக்கு பல திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்ல திமுக அரசுக்கு தகுதியில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். திமுகவில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை CBSE பள்ளிகளை திறந்து ஹிந்தி கற்றுக் கொடுப்பதாகவும், அனைத்து CBSE பள்ளிகளை மூட தமிழக அரசு ஆணையிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளால் அரசு பள்ளிகள் குறைந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!