News February 24, 2025
செல்போனில் இந்த லைட் எரிகிறதா? அப்படினா HACK

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.
Similar News
News February 24, 2025
தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 24, 2025
சச்சினின் சாதனையை சமன் செய்த கிங் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். சச்சின் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 100 சதங்களை அடித்துள்ள நிலையில், கோலி 82 சதங்களை நிறைவு செய்துள்ளார்.
News February 24, 2025
9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பாக விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.