News February 23, 2025

51ஆவது சதம் விளாசினார் விராட் கோலி

image

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் 3ஆவது விக்கெட்டுக்கு காேலி களமிறங்கினார். முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ODIஇல் காேலியின் 51ஆவது சதம் ஆகும்.

Similar News

News February 24, 2025

PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

image

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

News February 24, 2025

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அறிவிப்பு

image

அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களுக்கும் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்க உள்ளார். இதில் அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

News February 24, 2025

தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!