News February 23, 2025
BIG BREAKING: இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார்.
Similar News
News February 24, 2025
தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 24, 2025
சச்சினின் சாதனையை சமன் செய்த கிங் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். சச்சின் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 100 சதங்களை அடித்துள்ள நிலையில், கோலி 82 சதங்களை நிறைவு செய்துள்ளார்.
News February 24, 2025
9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பாக விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.