News February 23, 2025
மோடி- டிரம்ப்- நான் பேசினால் ஆபத்தா? மெலோனி

மோடி, டிரம்ப் மற்றும் தன்னைப் போன்ற தலைவர்களின் செயல்பாடுகள், இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். தேச நலன்களை பற்றி தாங்கள் பேசும்போது, ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக இடதுசாரிகள் கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் வெற்றி பெறுவது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
துளசியை இப்படிதான் வழிபட வேண்டும்

கடவுளுக்கு உகந்த செடியான துளசியினை வழிபடுவதற்கு சில முறைகள் உள்ளன. (1) துளசியை வீட்டில் வெயில்படும், சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும் (2) தினமும் காலை குளித்துவிட்டு துளசியின் முன் விளக்கு, ஊதுபத்தி ஏற்றலாம் (3) மந்திரங்களை ஓதியபடி துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் (4) துளசிக்கு பூக்களை தூவி பூஜை செய்யலாம் (5) அசுத்தமான கைகளால் துளசி செடியை தொட வேண்டாம்.
News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.
News February 24, 2025
ஜெ., பிறந்தநாளுக்கு அரசு சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. மெரினாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெ., பிறந்தநாளில் ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவிச் செய்ய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.