News February 23, 2025
வெளிநாடு வேண்டாம்.. புதுமணப் பெண் விபரீத முடிவு

காதல் கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த முத்தரசி, லட்சுமணன் என்பவரை 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். லட்சுமணனுக்கு குவைத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்கு முத்தரசி எதிர்ப்பு தெரிவித்தும் லட்சுமணன் விசா ஏற்பாட்டுக்கு மும்பை சென்றதால், அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்கெல்லாமா தற்கொலை?
Similar News
News February 24, 2025
விவாகரத்து வேண்டுமா..! இந்த கோயிலுக்கு கிளம்புங்க

நம் ஊரில் கல்யாணம் ஆவதற்காக கோயிலுக்கு செல்வார்கள். ஆனால், ஜப்பானியர்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள ஒரு கோயிலுக்கு சென்று வேண்டுகிறார்கள். அந்நாட்டின் கியோட்டோ என்ற இடத்தில் உள்ள ‘யாசுய் கொன்பிரகு’ கோயிலுக்கு சென்று ஜபித்தால் போதும் உடனே விவாகரத்து தான் என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். எவ்வளவு பெரிய பஞ்சாயத்தாக இருந்தாலும், சுமூகமாக mutual divorce கிடைக்குமாம். இப்படியும் சில நம்பிக்கைகள்.
News February 24, 2025
இந்தியாவில் இத்தனை அதிசயங்களா?

உலகளவில் எந்தெந்த நாடுகளில் அதிகளவு UNESCO கலாசார தளங்கள் இருக்கிறதென்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், முதலிடத்தில் 60 தளங்களுடன் இத்தாலி உள்ளது. 43 தளங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அவற்றில், தாஜ் மகால், அஜந்தா குகைகள் ஆகியவையும் அடங்கும். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மகாபலிபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.
News February 24, 2025
நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் டிஸ்கவுண்ட்.. அரசு திட்டம்

நெடுஞ்சாலை டோல்கேட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணத்தில் டிஸ்கவுண்ட் அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு டோல் கட்டணம் அதிகரிப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மாதம், வருட, ஆயுள்கால கட்டணத் தள்ளுபடியுடன் கூடிய பாஸ்களை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.