News February 23, 2025
ஈழத் தமிழ் ஊடக ஆளுமை காலமானார்

ஈழத் தமிழ் ஊடக ஆளுமையான பிபிசி தமிழோசையின் மூத்த செய்தியாளர் ‘ஆனந்தி அக்கா’ வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார். LTTE தலைவர் பிரபாகரனை முதன் முதலாக நேர்காணல் செய்து ஒலிபரப்பியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனந்தி அக்கா. இலங்கையில் சாவகச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1970களிலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தமிழ் ஈழம் சார்ந்த செய்திகளை 30 ஆண்டுகளாக வழங்கி வந்தவர்.
Similar News
News February 24, 2025
நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் டிஸ்கவுண்ட்.. அரசு திட்டம்

நெடுஞ்சாலை டோல்கேட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணத்தில் டிஸ்கவுண்ட் அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு டோல் கட்டணம் அதிகரிப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மாதம், வருட, ஆயுள்கால கட்டணத் தள்ளுபடியுடன் கூடிய பாஸ்களை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News February 24, 2025
செல்போனில் இந்த லைட் எரிகிறதா? அப்படினா HACK

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.
News February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: வெளியேறியது பாகிஸ்தான்

CTஇல் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நியூசி.க்கு எதிரான போட்டியிலும் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மட்டுமே மீதியுள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வர முடியாது.