News March 29, 2024

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நடவடிக்கை

image

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செலுத்த வேண்டிய ₹1,823 கோடி வரியை செலுத்துமாறு ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற செயல்களை மீண்டும் ஒருமுறை செய்ய தைரியம் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

image

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.

News August 14, 2025

அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

image

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.

News August 14, 2025

சபாநாயகர் அப்பாவு காரை சுற்றிவளைத்த பெண்கள்

image

நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முருகேசபுரத்தில் ₹423 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்க சபாநாயகர் அப்பாவு சென்றுள்ளார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த பெண்கள் 40% கூட முடிவடையாத இத்திட்டத்துக்கு விளம்பர தேடி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் திசையின்விளை பகுதியை அப்பாவு பாரப்பட்சமாக புறக்கணிப்பதாகவும், போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!