News February 23, 2025
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
Similar News
News February 23, 2025
இரண்டே படம்… அஜித், தனுஷ், சூர்யாவை முந்திய பிரதீப்!

டிராகன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 2 ஆம் நாளான நேற்று, புக் மை ஷோ App-ல் 288K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024ல் இருந்து 2025 இதுவரை, புக் மை ஷோ App-ல் முதல் வார சனிக்கிழமையில் அதிக டிக்கெட் புக் செய்து படங்களில் 4வது இடத்தை டிராகன் பிடித்துள்ளது. கோட், வேட்டையன், அமரன் படங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இதன் மூலம் ராயன், விடாமுயற்சி, கங்குவா படங்களின் சாதனையை டிராகன் முந்தியுள்ளது.
News February 23, 2025
மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்.. பெரிய சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல், மனைவி தனஸ்ரீக்கு விவாகரத்தின்போது ரூ.60 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியது. தனஸ்ரீ குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசன் தனது மனைவி சுசன்னேவிற்கு விவாகரத்தின்போது 2014இல் ரூ.380 கோடி ஜீவனாம்சம் கொடுத்தார். இந்திய பிரபலம் ஒருவர் ஜீவனாம்சமாக அதிக தாெகை கொடுத்தது இதுவே எனக் கூறப்படுகிறது.
News February 23, 2025
இந்தியாவுல நடந்திருந்தா நிலைமையே வேற!

உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் ஒன்று. 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியை 50 கோடி மக்கள் பார்த்ததாக புள்ளி விவரங்கள் உண்டு. ஆனால், இன்றைய போட்டியில் மைதான இருக்கைகள் காலியாக உள்ளன. துபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடந்திருந்தால் நிலைமையே வேற.