News February 23, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வணக்கத்திற்கு உரியவன். ▶நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ▶பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்கள் தேவை பூர்த்தியான பிறகு கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம். ▶ நெஞ்சிலே வலு இருந்தால், வெற்றி தஞ்சமென உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.
Similar News
News February 23, 2025
LIC வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!

ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக தங்களின் சொந்த விபரங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு LIC அறிவுறுத்தியுள்ளது. அதிக லாபம் கிடைக்கும் என ஆசையை தூண்டும் வாக்குறுதிகளை நம்பி உங்கள் பாலிசி மற்றும் KYC விபரங்களை தெரியப்படுத்தக் கூடாது எனவும் தனி நபரின் பெயரில் (அ) கணக்கில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. KYC சரிபார்க்க LIC அழைப்பதில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
News February 23, 2025
3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்: PM

இன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பட்ஜெட்டில் கேன்சர் சிகிச்சை தொடர்பாக வெளியான பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டினார். அதில் கேன்சர் சிகிச்சை மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.
News February 23, 2025
வலியால் அவதிப்படும் முகமது ஷமி

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பும்ராவும் இல்லாததால், ஷமியின் தேவை அவசியமாகிறது. ஆகையால், கணுக்கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் விளையாடி வருகிறார். அதன் தாக்கமாக, முதல் ஒவரிலேயே அவர் 5 Wide Ball வீசினார். பின்னர், 5ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின், மீண்டும் பந்துவீசத் தொடங்கினார்.