News February 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 187
▶குறள்:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
▶பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
Similar News
News February 23, 2025
வலியால் அவதிப்படும் முகமது ஷமி

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பும்ராவும் இல்லாததால், ஷமியின் தேவை அவசியமாகிறது. ஆகையால், கணுக்கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் விளையாடி வருகிறார். அதன் தாக்கமாக, முதல் ஒவரிலேயே அவர் 5 Wide Ball வீசினார். பின்னர், 5ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின், மீண்டும் பந்துவீசத் தொடங்கினார்.
News February 23, 2025
விடுபட்டோருக்கு விரைவில் ரூ.1,000: அமைச்சர் KKSSR

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் சேராமல் உள்ள பெண்கள், அரசு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், விடுபட்டோரில் தகுதியானோருக்கு விரைவில் ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
News February 23, 2025
சுரங்கத்தில் தெரிந்த தொழிலாளியின் கை

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதனிடையே, சுரங்கத்தில் 14 கி.மீ தூரத்தை அடைந்த நிலையில், சேற்றில் சிக்கியவாறு ஒரு தொழிலாளியின் கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளே சிக்கிய 8 தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைவருமே சேற்றில் சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.